விருது மக்களுக்கே சொந்தம்… வைரமுத்து…
  • 6 years ago
கள்ளிகாட்டு இதிகாசம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலத்திலும் மொழி பெயர்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கெங்குவார் பட்டி அருகே உள்ள தனது தோட்டத்து வீட்டில் கவிஞர் வைரமுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது கள்ளிக்காட்டு இதிகாசம் ஹிந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இது தமிழ் மண்ணுக்கு கிடைத்த பெருமை என்றும், இந்தவிருது மக்களுக்கே சொந்தம் என்றார். சாகித்திய அகாடமி இந் நூலை வெளியிட்டது என்றதுடன் தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியமொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடுவதற்கு தயாராக உள்ளது என்றார்.

Poetry Vairamuthu said that the language of the Kallikattu epigraphy will be released shortly in Telugu, Kannada, Malayalam and English.
Recommended