மழை வேண்டி தீச்சட்டி ஏந்தல்…வீடியோ

  • 6 years ago
அரக்கோணத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை வேண்டி தீச்சட்டி கஞ்சி சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை வேண்டி ஆன்மீக ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கஞ்சி சட்டி, தீ சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் வரை ஊர்வலமாக சென்றனர்.

Des: On the behalf of Adiparasakthi worship hall in Arakkalai, devotees took part in the kanji sati and the lamp of the shrine for the rain.

Recommended