ஆசிரியர் வேண்டும் மாணவ மாணவிகள் புகார்- வீடியோ
  • 6 years ago
கரூர் அருகே செயல்படும் அரசுமேல்நிலைப்பள்ளிக்கு வேளாண்பாடப்பிரிவுக்கு ஆசிரியர் நியமிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்தலாலாப் பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப்பள்ளியில் 11ம்வகுப்பு 12ம்வகுப்பு வேளாண்பாடப்பிரிவில் சுமார் 60க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வேளாண்பாடப்பிரிவு ஆசிரியை கடந்தமாதம்பணி இடமாறுதலாகி சென்று விட்டதால் வேளாண்பாடம் எடுக்க ஆசிரியை இல்லாததால் பாடம் படிக்க முடியவில்லை என்றும், உடனடியாக வேளாண்பிரிவிற்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்டகல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் காத்திருக்கும்படி மட்டுமே சொல்வதாகவும், ஆசிரியரை நியமனம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பள்ளியில் பயிலும் 12ம்வகுப்பு மாணவ, மாணவிகள் மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் மனு அளிக்கவந்தனர். அப்போது வெளியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்டவருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் மாணவ, மாணவிகளிடம் என்ன பிரச்சினை அப்போது மாணவ-மாணவிகள் தங்களுக்கு வேளாண் பாடத்தை நடத்தும் ஆசிரியர் கடந்த மாதம் பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதற்கு மாற்றாக இன்னும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இந்த மாத கடைசியில் தேர்வுகள் நடக்கவுள்ளது. இதனால் எங்களது கல்வி பாதிக்கப்பட உள்ளதை சுட்டிகாட்டி மாற்று ஆசிரியரை நியமிக்க வலியுருத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்ததாக தெரிவித்தார்கள். என்று கேட்டு விட்டு உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரை வரவழைத்து மதியம் 3 மணிக்குள் வேளாண்பாடப்பிரிவுக்கு ஆசிரியரை நியமனம் செய்யும்படி உத்தரவிட்டார்.உடனே மாவட்ட வருவாய் அலுவலர் பள்ளி நேரத்தில் இப்படி வரக்கூடாது என்றர் இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க வந்த மாணவ, மாணவிகளை 3 அரசுவாகனங்களில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பிவைத்தார். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் மனுவினை மாவட்டவருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் மனு அளித்து விட்டுச் சென்றனர்.


The school students and students requested the teacher to be appointed to the agricultural department at the government school near Karur.
Recommended