புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிக்க உதவி செய்ய வேண்டும் - முதலமைச்சர் நாராயணசாமி
  • 6 years ago
வரும் 6ம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு புதுச்சேரி வருவதையொட்டி அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் நாராயணசாமி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடிய துணை குடியரசுத் தலைவரிடம் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க உதவி செய்யுமாறும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended