தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி-யிடம் இன்று விசாரணை

  • 6 years ago
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி துப்பாக்கிச்சூட்டில் பலியான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த செல்வசேகர், கந்தையா, காளியப்பன் மற்றும் உசிலம்பட்டி ஜெயராமன் ஆகியோரின் உறவினர்களிடம் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் விசாரணை மேற்கொண்டார். 2 வது நாளான இன்று முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்று முருகன் தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended