இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • 6 years ago
அயர்லாந்துடன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வென்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 70 ரன்களை குவித்த ராகுல், கெவின் ஓ பிரையன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். சிறப்பாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தபோது ஓ பிரையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 213 ரன்களை எடுத்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 12 ஓவர் 3 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் இந்திய தரப்பில் ஆட்ட நாயகனாக லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended