மகளை கர்பமாக்கிய கொடூர தந்தை - மூன்று ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

  • 6 years ago
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவன் வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளான். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறான். இவர்களின் இரண்டு மகள்களின் மூத்த மகளை மனைவி அழைத்து சென்ற நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாவது மகளை மிரட்டி தந்தை துரைராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி கர்பமாக இருந்ததை அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து காங்கேயம் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொடூர தந்தை துரைராஜை கைது செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தந்தைக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 3 ஆயூள் தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended