போலி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு 10 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் - 17 பேர் மீது வழக்கு பதிவு

  • 6 years ago
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் நடந்துள்ளது என்று செந்தில் கண்ணன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015-2016 ஆம் ஆண்டு போலியான பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6 ஆயிரத்து 777 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என மொத்தமாக 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என மொத்தமாக 17 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்சம் ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended