மூன்றாண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல தாதா சிடி. மணி உள்பட 6 பேர் கைது

  • 6 years ago
தென்சென்னையை சேர்ந்த பிரபல தாதா சிடி.மணி. இவர் மீது 8 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆட்கடத்தல் என 40 வழக்குகள் உள்ளன. இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் உள்ளன. இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த பின் தலைமறைவாக இருந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை புறநகர் பகுதியில் தங்கி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிடி மணியின் நெருங்கிய கூட்டாளியான டொக்கன்ராஜா கடந்த10 நாட்களுக்கு முன் மயிலாப்பூரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சிடி மணியை தேடி வந்த தனிப்படை போலீசார், ஸ்ரீபெரும்புதூரில் தங்கியிருந்த சிடி.மணி் அவரது கூட்டாளிகள் வினோத், சொறிசுரேஷ் , இளங்கோ, மாதவன், ஹரி ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கைத் துப்பாக்கி, கத்தி , அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended