மூதாட்டியை ஏமாற்றி பட்டப்பகலில் திருட்டு- வீடியோ

  • 6 years ago
திருப்பத்தூர் அருகே மூதாட்டியை ஏமாற்றி பட்டப்பகலில் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து நூதன முறையில் 20 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கோதை. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி கோதை ஆகிய இருவரும் பணிக்கு சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த அவரின் தாய் ராஜகுமாரியிடம் பெண் ஒருவர் வந்து தங்கள் மருமகளிடம் நான் பணம் கொடுக்க வந்தேன் என்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே பீரோவில் இருந்த ஆரம், வளையல்கள் என 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 20 பவுன் நகையை திருடி சென்ற அந்த மர்ம பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

des: The police are investigating the tragedy near Tirupattur and open the bureau in the house in the battered house and the looting of 20 sour jewels

Recommended