வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை- வீடியோ

  • 6 years ago
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வடபுதுப்பட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அவரின் மனைவி சத்யவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடியாத்தம் அருகேயுள்ள வளத்தூரில் உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குழந்தைகளுடன் சத்யவாணி சென்றிருந்தார். அதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 60 சவரன் தங்கநகைகள் ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். வீடு திரும்பிய சத்யவாணி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து ஆம்பூர் கிராமிய காவல்துறையில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

des: The police lodged a suit against the robbers who robbed the house's boots and robbed 60 sovereign jewels in Bairo.

Recommended