வயது பேச முடியாத சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !

  • 6 years ago
17 வயது பேச முடியாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்து உடலை புதருக்குள் வசிவிட்டு கொளியாளிகள் தப்பி ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

சிவகங்கை அச்சரம்பட்டியில். வசித்து வருபவர் அழகு. இவரது இரண்டாவது மகள் அழகு தேவி வாய் பேச தெரியாதவர்.இன்றுகாலை தேவியின் தந்தையும் தாயும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அழகுதேவி மட்டும் வீட்டில் தனியாக ருந்துள்ளார். அழகுதேவி தனியாக இருப்பதை அறிந்தஅடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் நுழைந்து தேவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி தங்களை அடையாளம் காட்டி விடுவார் என பயந்து சிறுமியைதலையில் பயங்கர ஆயுதத்தால் அடித்து கொலை செய்து சிறுமியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த புதருக்குள் வீசி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.சிறுமியின் கொலை குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடம் வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைகைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். னுளுP இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

Recommended