கண் இமைக்கும் நேரத்தில் 15 லட்சம் கொள்ளை- வீடியோ

  • 6 years ago
கண் இமைக்கும் நேரத்திற்குள் ஜவுளி வியாபாரியிடம் இருந்து 15 லட்சம் ருபாயை கொள்ளை அடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்



தெலுங்கானா மாநிலம் பத்தராச்சலம் பகுதியை .சேர்ந்தவர் கோவிந் ஜவுளி வியாபாரியான இவர் வாராவாரம் ஜவுளிகளை வாங்கி செல்ல ஈரோடு வருவதுண்டு வழக்கம் போல் நேற்று முன் தினம். ஈரோடு வந்த கோவிந் ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் துணிகளை வாங்கி பார்சல்களை லாரிகளில் அனுப்பி விட்டு 15 லட்சத்தை எடுத்து கொண்டு இன்னும் சில ரக துணிகள் வாங்க திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்தார் அப்போது தான் பணம் வைத்திருந்த கை பையை சீட்டின் மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்து விட்டு பக்கத்தில் இருந்த நண்பரிடம் பேசிக் கொண்டு இருந்தார் கண் இமைக்கும் நேரத்திற்குள் கோவிந்த் வைத்த பணப் பை மாயமானது அதிர்ச்சி அடைந்த கோவிந் பேருந்து நிலையத்தில் இருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனை தொடர்ந்து கோவிந்திடம் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காட்டி காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பட்டபகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது​

Recommended