இனி தன்னை இரண்டாவது எம்.ஜி.ஆர். என்று அழைக்க தினகரன் உத்தரவு- வீடியோ

  • 6 years ago
புதிய கட்சித் துவக்கி அதனை ' நடத்தி' வரும் தினகரன், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். தினகரன் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை முக்கியஸ்தர்கள் பலரும் புறக்கணித்தனர்.

இது, தினகரனை அப்-செட்டாக்கினாலும் அதனை வெளிப்படுத்திக்கொள்ளாமல், எப்போதும் போல தான் உற்சாகமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில், தற்போது நிர்வாகிகளுக்கு அவர் போட்டிருக்கும் கட்டளை, எதிர் தரப்பின் கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறது.

Dinakaran orders his party activist to print posters mentioning him as 2nd Puratchi Thalaivar.

Recommended