சூறாவளி காற்றில் புளியமரம் வேரோடு சாய்ந்ததில் இருவர் பலி...வீடியோ

  • 6 years ago
சூறாவளி காற்றில் புளியமரம் வேரோடு சாலையில் சாய்ந்த போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் அடுத்த கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் பூமாரி என்ற ராஜூ, இவர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். அருகில் உள்ள கனவாய்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி மனோகர் என்பவருடன் இன்று காலை இருசக்கர வாகனத்தில் துவரங்குறிச்சியிலிருந்து புத்தாநத்தம் சென்ற போது சாலையோரம் இருந்த புளிமரம் ஒன்று திடீரென அடித்த சூறாவளி காற்றினால் மரம் வேரோடு சாய்ந்து சாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் ராஜூ நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மனோகர் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended