பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் கை கலப்பு

  • 6 years ago
ரயிலில் பயணம் செய்த பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கியதாகவும் அதனால் அதிரமடைந்த பயணிகளை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது

சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 8. 50 மணிக்கு அரக்கோணம் வந்தது அதில் பொது பிரிவு பெட்டியில் பயணிகள் ஏறிய போது இந்த பெட்டி சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கூட்டத்தில் கலந்துகொண்ட ரயில்வே ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் யாரும் ஏறக்கூடாது என பொதுமக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டனர் அப்போது பொதுமக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு வாய்தகராறு ஏற்பட்டு ரயில் புறப்பட்டு சென்ற போதே ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர் இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரக்கோணம் ரயில்நிலையத்தினுள் ரயில் வந்தவுடன் ரயிலின் முன்பு மறியலில் ஈடுபட்டனர் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ரயில் மறியலை கைவிடும்படி போலீசார் தெரிவித்தார் ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரயில் புறப்பட்டவுடன் துரத்தி துரத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது

Recommended