பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்தவர் கைது-வீடியோ

  • 6 years ago
des:கடலூரில் பாம்பு வைத்து பூஜை நடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய பாம்பாட்டியை தேடிவருகின்றனர். கடலூர் துரைசாமி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவரது சதாபிஷேக விழா (80 வயது பூர்த்திக்கான சிறப்பு பூஜை) நடைபெற்றது. இப்பூஜையில் பாம்பை நாகராஜாவாக வைத்து அதற்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அந்த பூஜை முடியும் வரை அந்த பாம்பு படம் எடுத்து ஆடுவதை நிறுத்தாமல் அந்த பாம்பாட்டி பார்த்துக்கொண்டார். இதனை சிலர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளனர்.

Recommended