டெல்லியில் வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்று மோசடி..

  • 6 years ago
வெறும் தகரத்தை, அபூர்வமான தகரம் என்று பொய் சொல்லி 1.4 கோடி ரூபாய்க்கு விற்று டெல்லியில் ஒரு கும்பல் மோசடி செய்து இருக்கிறார்கள். ரைஸ் புல்லிங் எனப்படும் மோசடி முறையை பயன்படுத்தி இந்த செயலை அந்த கும்பல் செய்துள்ளது. ரைஸ் புல்லிங் மோசடியில், பொதுவாக ஒரு பழைய தகரத்தையோ, செம்பு கலசத்தையோ எடுத்து வந்து, இதில் மின்னல் தாக்கி அதிக சக்தி உருவாகி இருக்கிறது, இது அரிசியை தன் பக்கம் இழுக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது, இதை கையில் வைத்து இருப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்து சக்ரவர்த்தியாக மாறலாம், என்று சதுரங்க வேட்டை படத்தில் ஏமாற்றுவது போல விற்று ஏமாற்றுவார்கள். அதையேதான் இவர்கள் டெல்லியிலும் செய்து இருக்கிறார்கள்.



5 men arrested for allegedly cheating a business by Rice Pulling technique .They have cheated him and looted of Rs.1.4 crore form him in Delhi.

Recommended