மகன் வேண்டும் ! கதறி அழும் பெற்றோர்

  • 6 years ago
வெளிநாட்டு வேலை என சென்று உயிருக்கு போராடும் தன் மகனை மீட்டு தமிழகம் கொண்டு வர கோரி கதறி அழுதபடி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் குணசேகரன் கடந்த ஆண்டு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தொலைபேசி மூலம் பேசிய குணசேகரன் 2 மாதமாக தனக்கு கூறிய வேலையை கொடுக்காமல் சுத்தம் செய்யும் பணி கொடுத்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அடித்து துன்புறுத்தி வருகிறார்கள் 20 மணி நேரமும் வேலை வாங்குவதுடன் உணவும் வழங்காமல் தன்னை அங்கு கொடுமை படுத்துவதாகவும் எனவே எப்படியாவது காப்பாற்றுங்கள் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று குணசேகரன் பெற்றோர்கள் ஏழுமலை மற்றும் சகிலா வெளிநாட்டில் இருக்கும் தன் மகனை பத்திரமாக தமிழகம் கொண்டுவர வேண்டி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுதபடி மனு கொடுத்தனர்.

DES : The petition filed by the petitioner to the Tamil Nadu Government

Recommended