கோர விபத்து !பலர் படுகாயம்
  • 6 years ago
தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் ஒருவர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர்

வேலூர்மாவட்டம்,நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெலக்கல்நத்தம் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது அதிகவேகமாக வந்த லாரியில் எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து பக்கத்தில் உள்ள சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றது அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி 29 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆம்பூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் பேருந்து ஓட்டுநர் சென்னையை சேர்ந்த வீராசாமி படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

DES : More than 10 people have suffered serious injuries when a private bus and a container lorry collided
Recommended