மன்சூர் அலிகான் விடுதலை , எஸ் வி சேகரால் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு
  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


Actor Mansoor Ali khan released from Puzhal jail on today. Journalist KavinMalar filed a case against TamilNadu Chief Secretary Girija vaidyanathan who is close relative of absconding Actor and BJP politician S Ve Shekher.
Recommended