தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் ஆர்ப்பாட்டம்!- வீடியோ

  • 6 years ago
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்க வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கோவில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு 3 நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். சிறுமியை 8 பேர் சேர்ந்து கொடூரமாகக் கொன்ற இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Recommended