திமுகவுக்கு பொன்னார் கேள்வி!

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே போராடியதாக முரசொலி தவறான தகவலை பரப்பி தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றுவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது : முரசொலி பத்திரிக்கையில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த கடைசி பக்கத்தில் இரண்டு புகைப்படங்களும் செய்தியும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

Union minister Pon.Radhakrishnan charges DMK is propaganding false informations among its cadre and people in cauvery issue.

Recommended