பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்..ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு!- வீடியோ

  • 6 years ago
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராததால், மாணவ-மாணவியரே பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவில்லிப்புத்தூர் அருகே உள்ள ஊர் சின்ன அத்திக்குளம். இங்கே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாம். ஆனால் இதில் 21 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளியின் வேலைநேரம் காலை 8.45 முதல் மாலை மணி வரையாகும். ஆனால் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லையாம். தினமும் காலை 11 மணிக்குதான் வருவார்களாம். இப்படியே ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை சொல்லியுள்ளனர். பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் சென்று உரிய நேரத்துக்கு பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Since the teacher did not come to work at a government school near Srivilliputhur, the students were locked up in school. Parents urged teachers to come to school at the right time

Recommended