காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு...

  • 6 years ago
காவிரி இறுதித்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஸ்கீம்' வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் மத்திய அரசும், கர்நாடகாவும் உச்சநீதிமன்றம் சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சொல்லி வருகின்றன.



SC to hear cases of centre filed explaination for scheme word in the final judgement and also the contempt of court filed by Tamilnadu and Puducherry today.

Recommended