பரோல் முடிவதற்குள் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

  • 6 years ago
பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா இன்று மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டுள்ளார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தஞ்சை அருளானந்தநகரில் உள்ள கணவர் நடராஜன் வீட்டில் தங்கியுள்ளார். துக்கம் விசாரிப்பதற்காகவும், சசிகலாவை பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வந்து சென்றனர். தஞ்சையில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நாளும் குடும்பத்தினரின் சொத்து தகராறு தொடர்பான பஞ்சாயத்துக்களை தீர்த்து வைப்பதிலேயே சசிகலாவுக்கு நேரம் போய்விடுகிறது. குறிப்பாக தினகரன், விவேக் மோதல் அவரை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே தான் அவர் முன்னதாகவே பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்கிறார் என்றும் கூறப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து அவர் சாலை மார்க்கமாக சசிகலா பெங்களூரு புறப்பட்டார்.

Sasikala leaves from Thanjavur to Bengaluru Jail. Sasikala leaving to jail before completion of her parole. Sasikala Parole completes on April 3rd.

Recommended