மிக பெரிய சர்ச்சையில் கவுதம் மேனன்!- வீடியோ
  • 6 years ago
தன்னை பற்றி புகார் தெரிவித்த இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தெரிவித்தபடி கவுதம் மேனன் பணம் கொடுக்காததால் தாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்த்தார். எங்களை குப்பையை போன்று நடத்தினீர்கள். இனி யாரையும் ஏமாற்றாதீர்கள் என்று கார்த்திக் மேலும் தெரிவித்தார். இதை பார்த்த கவுதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நரகாசூரன் குறித்து பல நல்லது நடந்தபோது என் இயக்குனர் கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை அதிருப்தி அடைய வைத்தது. மீடியாக்களிடம் இருந்து பல போன் கால்கள் வந்ததும் அப்செட் ஆகி பதிலுக்கு ட்வீட்டினேன். நான் அப்படி செய்திருந்திருக்கக் கூடாது. அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் அதன் பிறகு படம் என் பொறுப்பு அல்ல. மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் கார்த்திக்கிற்கு கோபம் வந்துள்ளது என்பது புரிகிறது. பட ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது. கார்த்திக் தனது அடுத்த படத்தை துவங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். அவர் தாராளமாக செய்யலாம், ஏற்கனவே வேலையை துவங்கிவிட்டார். முழு பணத்தையும் கொடுக்கும் வரை டப்பிங் பேசமாட்டேன் என்று கூறிய அரவிந்த்சாமி பணம் கொடுத்த பிறகு பேசுவார். கார்த்திக் மற்றும் எனக்கு இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. படம் விரைவில் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

Director cum producer Gautham Menon has given a long explanation on twitter about the accusations made by Naragasooran director Karthik Naren.
Recommended