அதிமுக, திமுக மோதலால் திருவாரூரில் பரபரப்பு- வீடியோ

  • 6 years ago
கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதிமுக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு....

திருவாரூரில் உள்ள கல்லிக்குடி கூட்டுறவு சொசைட்டிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 2 ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டிடும் அதிமுக திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. காலையில் வேட்புமனு தாக்கலின் போது திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு வந்த திமுக வேட்பாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அதிமுகவினருக்கு சாதமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல் கரூரில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது அதிமுகவினரும் டிடிவி தினகரன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து சிறுது நேரம் வேட்புமனு தடைபட்டது. பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்ததையடுத்து வேட்புமனு தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டது.

Des : Complaint of Co-operative Societies

Recommended