டிடிவி தினகரன் புதுகட்சி தொடங்குகிறார்..வீடியோ

  • 6 years ago
மதுரையில் எங்களது அணியின் பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். புதிய அணி தான் தொடங்கப் போகிறோம் புதிய அணி அல்ல என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய அமைப்பை தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.


TTV Dinakaran said that press person in Delhi to launch new political party, unveil flag on March 15 in Tamil Nadu's Madurai

Recommended