பந்துடன் துணியை வீசியதால் குழம்பிப்போன மனிஷ் பாண்டே- வீடியோ
  • 6 years ago
நேற்றைய போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் பந்து வீசுகையில் பந்துடன் துணியை வீசியதால் குழம்பிப்போன பேட்ஸ்மான் மனிஷ் பாண்டே அம்பையரை பார்த்து என்ன இது என்று குழப்பத்துடன் கேட்ட வீடியோ வைரலாகிவருகிறது.

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, குசால் மெண்டிஸ் களம் இறங்கினார்கள். இந்தியா சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 11 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ராகுல் களமிறங்கினார். அவரை தொடர்ந்து ஷிகர் தவான் 8 ரன்னில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
Recommended