கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான கவிதை-வீடியோ
  • 6 years ago
பிடர் கொண்ட சிங்கமே பேசு என்று கருணாநிதி குறித்து வைரமுத்து உருக்கமான கவிதையை எழுதி அவர் முன்பு படித்துக் காட்டினார். கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியானது அடுத்து தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் அவர் எப்போதும் உடன்பிறப்புகளே என்று அழைப்பார் என்று தொண்டர்கள் காத்துகிடக்கின்றனர். இதனிடையே, கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு உருக்கமான கவிதையை எழுதி அதை அவரிடம் படித்து காட்டியுள்ளார்.

Vairamuthu writes poem for Karunanidhi and reads before him in Gopalapuram house.
Recommended