கேப்டன் ஆன பின் அஸ்வின் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ
  • 6 years ago
தான் கேப்டன் ஆனது குறித்து தமிழக வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல அவரது டிவிட்டும் வைரல் ஆகி இருக்கிறது.

இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பலரும் ஏன் எடுக்கவில்லை என்று கூட கேள்வி கேட்டு இருந்தார்கள்.

IPL auction 2018 held in Bengaluru. Ashwin sold out to Punjab in IPL auction 2018 . He sold out for 7.60 cr. Punjab team welcomes Ashwin for their team.
Recommended