அனைத்து கட்சி கூட்டம்..காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்- வீடியோ
  • 6 years ago
காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் காவிரி நடுவர் மன்றம் அளிக்க உத்தரவிட்ட தண்ணீரை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவாகவே விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


CM Edappadi Palanisamy leads today the all party meeting in the issue of Cauvery water dispute. 43 organisations are called for this meeting.
Recommended