செல்போன் டவர் ஏறிய கணவன்

  • 6 years ago
உலகம் முழுவதும் நேற்று காதல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மனைவி குடும்ப நடத்த வரவில்லை என கூறி கணவன் செல்போன் டவர் ஏறிய சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் சித்தூர் கிரிம்ஸ்பேட்டையை சேர்ந்தவர் பாபு அதே பகுதியில் உள்ள அருணாவை காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் என்ற 5 வயது மகன் உள்ள நிலையில் பாபு சந்தேகமடைந்து மனைவி அருணாவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கடந்த வாரம் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்கு தனது மகன் கார்த்தியையும் அழைத்து கொண்டு சென்றார். இந்நிலையில் பாபு செல்போன் டவர் மீது ஏறி நின்று தனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து மிரட்டி வந்தார். இந்த தகவல் அறிந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினருடன் பாபுவிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை செய்தும் அருணா மூலம் குடும்ப நடத்த செல்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பாபு கிழே இறங்கி வந்தார்.

The incident took
place at Chithur, where the husband's cell phone came to light, saying that his
wife had not been married for the whole day.