சென்னையில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி வீடுபுகுந்து படுகொலை- வீடியோ

  • 6 years ago
சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை தெற்கு ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்தக் கொலையின் பின்னணியில் புதியவனின் ஓட்டுநரும் அவருடைய நண்பர்களும் உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை ஐ.சி.எப். சிக்னல் அருகே உள்ள சென்னை பாட்டை சாலையில் வசித்து வந்தவர் ஜே.கே.புதியவன். ரெயில்வே தொழிற்சங்க வட்டாரத்தில் பிரபலமான இவர், ஏஐஓபிசி என்ற தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். தெற்கு ரெயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வந்த அவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார்.

புதியவனின் மனைவி ரஞ்சிதாவும் ஐ.சி.எப்.பில் ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் புதியவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இன்று காலை 9 மணியளவில் 4 பேர் புதியவனின் வீட்டிற்கு வந்துள்ளனர். 2 பேர் வீட்டு வாசலிலேயே நின்றுகொள்ள இருவர் மட்டும் புதியவனுடன் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருந்துள்ளனர். திடீரென இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றவே தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் புதியவனை கழுத்து, தலை, தோல்பட்டை என்று அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து காப்பாற்றுங்கள் என்று புதியவன் அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.



AIOBC railway association secretary Puthiyavan murdred by gangsters at Chennai in front of his family members, Police recovered the body and the investigation is underway.

Recommended