இந்தியாவிற்கு பயந்து புதிய திட்டம் வகுக்கும் தென் ஆப்ரிக்கா- வீடியோ

  • 6 years ago
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய வெற்றி பெற்று இருக்கிறது. இந்தத் தொடர் வெற்றிகள் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் இந்தியா தொடரை வென்றுவிடும். இந்த நிலையில் இந்திய அணியின் சூழலை சமாளிக்கத் தென்னாப்பிரிக்க புதிய திட்டம் போட உள்ளது,. முக்கியமாக ஸ்பின் பவுலர்களை சமாளிக்கத் திட்டம் வகுக்க உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது போலவே ஒருநாள் தொடரையும் வென்று விடலாம் என்று நினைத்தது. முக்கியமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை வாஷ் அவுட் செய்வோம் என்றும் கூறினார்கள். ஆனால் இந்தியா வரிசையாக மூன்று ஒருநாள் போட்டியை வென்று கிலி ஏற்படுத்தியுள்ளது.

south africa planing to face spin bowlers in 4th odi against india

Recommended