அவமானப்படுத்தப்பட்ட பள்ளி மாணவி.. லெட்டர் எழுதிவிட்டு தூக்கு- வீடியோ
  • 6 years ago
சமீப காலங்களில் இந்தியாவில் பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதேபோல் பள்ளி நிர்வாகம் மாணவர்களை மோசமாக நடத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாநில அரசும் பள்ளிகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதித்தாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இதே போல் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

அங்கு இருக்கும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். பள்ளியில் மோசமாக நடத்தியதாக லெட்டர் எழுதி வைத்து இருக்கிறார்.தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி அங்கு இருக்கும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் சகோதரியும் அதே பள்ளியில் படித்து வருகிறார். தேர்வுக்கான பீஸ் கட்டவில்லை என்று அந்த மாணவியை இரண்டு நாட்களாக பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த தேர்வை எழுத அந்த மாணவி அனுமதிக்கப்படவில்லை. மேலும் எல்லோர் முன்னிலையிலும் அந்த மாணவி மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறாள். இது குறித்த அந்த சிறுமி தன் தங்கையிடம் சொல்லி அழுது உள்ளாள்.

Hyderabad school student commits suicide after teacher scolds her. She was just 9th std student. She wrote letter to her mom says sorry for leaving.
Recommended