அறிவிப்பின்றி பேருந்து கட்டணம் உயர்வு பொதுமக்கள் அதிருப்தி

  • 6 years ago
எந்த வித முன் அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் இருந்து பேருந்து கட்டணம் 5 ரூபாய் இருந்து 150 ரூபாய் வரை உயர்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

தமிக அரசு போக்குவரத்துறையில் உள்ள இழப்பை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை 5 ரூபாய் இருந்து 150 ரூபாய்வரை உயர்த்தியுள்ளது. மாநகர, நகர பேருந்துகள், சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் என்று அனைத்து பேருந்துகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பைட்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கழகத்தின் நிதி நெடுக்கடியை சமாளிக்க அரசு வேறுமுறையை கையாண்டிருக்கலாம் என்று தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பைட்

அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைந்த அளவு வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Des : General and political party leaders have condemned the bus fares from midnight to 150 rupees from midnight without any notic

Recommended