கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து வழக்கு பதிவு
  • 6 years ago
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளதுடன் இந்து அமைப்புக்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதா ஆர் கே நகர் போலீசாரும் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஆண்டாள் நாச்சியார் குறித்து பிரபல பத்திரிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பேசினார். வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததுடன் ஆர்பாட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் மற்றும் சிந்தாரிப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆர்கே நகர் காவல் நிலையத்திலும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The controversy has been raised by the poet Vairamuthu about Andal and the RK Nagar police have filed a case against Vairamuthu for continuing denunciations of Hindu organizations.
Recommended