ஆண்டாள் முன்பு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்- தீவிரமடையும் போராட்டம்- வீடியோ
  • 6 years ago
ஆண்டாளைப் பற்றி தவறாக பேசிய வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மயிலை மாங்கொல்லையில் ஆயிரக்கணக்கான பிரமாணர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 12 ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் நாச்சியார் குறித்து கவிஞர் வைரமுத்து தவறான கருத்து கூறினார் என்பது குற்றச்சாட்டு. இதனைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாப்பூரில் போராட்டம் நடத்தினர். கவிஞர் வைரமுத்து சில நாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் ஆண்டாள் குறித்து சில கருத்துகள் கூறியிருந்தார். அந்த கருத்து இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆண்டாள் பற்றி பேசிய வைரமுத்துவிற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிராமண பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால், மாங்கொல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Recommended