யாரும் ஒருவராவது நல்லா விளையாடிருக்கலாம்... விராட் கோஹ்லி அப்செட்- வீடியோ
  • 6 years ago
இந்திய பேட்டிங் மோசமாக இருந்ததே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்விக்கு காரணம் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கே ஆல்அவுட்டானது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களும், 2வது இன்னிங்சில் 135 ரன்களும் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 72 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அவர்கள் என்னதால் அதிரடியை ஆரம்பித்தாலும் 220 ரன்களுக்குள்ளாவது மடக்கியிருந்தால் இந்தியாவுக்கு வெற்றி எளிதானதாக இருந்திருக்கும்.
விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக இந்திய அணி வீரர்கள் இழந்தது சரியில்லை. டெஸ்ட் போட்டியின் அனைத்து நாட்களிலுமே நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு திறந்தே இருந்தது. ஏதாவது ஒரு நாளை நாம் முழுமையாக கையகப்படுத்தியிருந்தால் வெற்றி நமக்கு கிடைத்திருக்கும்.

Virat Kohli bemoaned India's inability to string partnerships together after they suffered a 72-run defeat to South Africa in an absorbing first Test. India were set a target of 208 for victory at Newlands after bowling the Proteas out for 130 on day four.But they subsequently slumped to 135 all out as Vernon Philander took a career-best 6-42 for South Africa, who lost Dale Steyn for the series with a heel injury but can now win it with victory in the second Test at Centurion, which starts on Saturday.
Recommended