ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு- வீடியோ

  • 6 years ago
எம்எல்ஏக்கள் பலர் சபரிமலைக்கு சென்றிருப்பதாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் கூட்டத்தில் பகேற்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் 8 ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சட்டசபை தொகுதி பிரச்சனைகள் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியதாக அவர் கூறினார். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டி.டி.வி தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளால் ஆட்சியை கவிழ்க்கவோ ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கவோ முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

டி.டி.வி தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளால் ஆட்சியை கவிழ்க்கவோ ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கவோ முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Minister Jayakumar says TTV dinakaran arrival to Assembly will not creat any impact. Jayakumar says 104 MLAs participated in the MLAs meeting. He explained why all the MLAs did not participate in the meeting.

Recommended