திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு- வீடியோ

  • 6 years ago


வேத மந்திரங்கள் முழங்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி மார்கழி மாத சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது வேத மந்திரங்கள் முழங்க தெற்கு திசையில் உள்ள சொற்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணி முதல் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .வைகுண்ட ஏகாதசிக்காக திருமலையில் உள்ள ஜி.என்.சி. சோதனை சாவடி முதல் கோயில் வரை அனைத்து இடங்களும் மின் விளக்குகளாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கலியுக வைகுண்ட பெருமாள் காட்சியளித்து வருகிறார்.

Recommended