இது என்ன பாஸ் புது தினுசா இருக்கு?- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் இந்திய வீரர்கள் மிகவும் வித்தியாசமாக அதை கொண்டாடினார்கள். இந்திய அணியில் பாண்டியாவின் வருகைக்கு பின் வித்தியாசமான கொண்டாட்டங்கள் சில நடக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் தவான் கேட்ச் பிடிக்கும் போது தொடையில் தட்டி மீசையை முறுக்குவார். அதேபோல் சாஹல் 'பாங்கரா' நடனத்தில் வருவது போல காமெடியாக நிற்பார். தற்போது இதில் பாண்டியாவும் சேர்ந்து இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இறங்கிய இலங்கை 87 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. டி-20 போட்டியில் இதுதான் இந்தியாவின் சிறந்த வெற்றியாகும். மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதில் வென்று இருக்கிறது.

இந்த போட்டியில் சாஹல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் போட்ட சாஹல் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இவரது சுழலில் இலங்கை அணி மொத்தமாக அடங்கியது. இந்த சிறந்த பந்து வீச்சால் நேற்று இவருக்கு மென் ஆப் தி மேட்ச் பட்டம் வழங்கப்பட்டது.



First T20 match between India vs Srilanka held today in Barabati Stadium, Cuttack. Rohith Sharma will lead the team as captain.India bat first. India took 180 runs in 20 overs. Sri Lanka took 87 runs. India lead the series in 1-0 margin. Pandya and Shreyas new Hi5 in 1st t20 against Sri Lanka got viral in social media.

Recommended