பெரிதாக பேசப்பட்டு புஸ்வானமாகிப் போன 2ஜியின் கதை இதுதான்!- வீடியோ

  • 6 years ago
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த வந்த பாதை குறித்து வாசகர்களுக்கு நினைவூட்டுவதற்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மே 2007 அன்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக அ.ராசா பொறுப்பேற்றுக் கொண்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான நடைமுறைகள் தொடங்கின. செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக அக்.1, 2007-ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்தது. அன்றைய தினம் தொலைத்தொடர்பு துறையில் 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.

Here is the order of events of 2G case which travels for the past several years. Today is the judgement for this case.

https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration: Game.of.Thrones.S07E01
Edit By Ender Güney

Recommended