திரும்பி போகும்போது கண்ணீர்விட்ட கருணாநிதி... அறிவாலயத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்- வீடியோ
  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுததால் தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலைக்குறித்து பல்வே வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

அண்மையில் முரசொலி பவளவிழாவை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்தார் கருணாநிதி. அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட அவர் புறப்படும் போது தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
இதைத்தொடர்ந்து கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனோ ரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. இதனை கருணாநிதி நடத்தி வைத்தார்.

DMK leader Karunanidhi visited Arivalayam yesterday. Karunanidhi cried at Arivalayam when he was about to leave there.
Recommended