மும்பையில் தஷ்வந்த் தப்பியது எப்படி? சிசிடிவி காட்சி வெளியிட்ட போலீஸ்- வீடியோ
  • 6 years ago

மும்பை ஹோட்டலில் இருந்து போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பியோடிய காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை சேகரித்த குன்றத்தூர் போலீசார், தற்போது அதை வெளியிட்டுள்ளனர். சிறுமி ஹாசினியை கொன்று விட்டு சிறைக்குப் போய் ஜாமீனில் வந்த தஷ்வந்த் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாயை கொடூரமாக கொன்று விட்டு தப்பினார். குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படை அமைத்து அவரை தேடினர். மும்பை செம்பூர் பகுதியில் உள்ள உல்லாச அழகிகள் விடுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை சென்ற போலீசார், தஷ்வந்தை கைது செய்தனர்.

தஷ்வந்தை இரவோடு இரவாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர மும்பை விமான நிலையம் அழைத்து சென்றனர். விமானத்தில் ஏற மறுத்த தஷ்வந்த் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். தனிப்படை போலீசாரை அடையாளம் தெரியாமல் வாலிபர் ஒருவரை சிலர் கடத்த முயற்சிப்பதாக மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
Recommended