லைசென்ஸ் இல்லையா, விமானத்தை ஓரம் கட்டு..அதிகாரிகளிடம் சிக்கிய பைலட்- வீடியோ

  • 6 years ago
வீட்டில் லைசென்ஸ்சை மறந்து வைத்துவிட்டு வந்தால் டூவீலர், கார் ஓட்டுநர்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதிப்பதை பார்த்துள்ளோம். ஆனால், லைசென்ஸ் இல்லாமல் விமானம் ஓட்ட முயன்ற பைலட் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இந்திய விமான துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் இப்போதுதான் நடந்துள்ளது. டெல்லியிலிருந்து மஸ்கட் புறப்பட வேண்டிய ஓமன் ஏர் விமானத்தின் பைலட்தான், இப்படி வகையாக சிக்கிக்கொண்டவர். இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஓமன் விமானத்தின் கோ-பைலட் ஒருவர் லைசென்ஸ் வைத்திருக்கவில்லை என்பது அம்பலமானது.

எப்போதுமே விமானிகள் கமர்சியல் பைலட் லைசென்ஸ் எனப்படும் அந்த லைசென்சை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் இவ்வாறு அந்த பைலட் வைத்திருக்கவில்லை என்பதால் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை ஆரம்பித்தனர்.
அதிகாரிகளின் திடீர் சோதனையால், பயணிகள் ஏறிய நிலையில் கிளம்ப தயாராக இருந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓமன் ஏர்லைன்ஸ், இந்திய விமானத்துறை அதிகாரிகளுக்கு, சம்மந்தப்பட்ட பைலட்டின் லைசென்சை ஃபேக்ஸ் செய்தது. அதை சரிபார்த்த பிறகே 2 மணி நேரம் கழித்து விமானத்தை கிளம்ப அனுமதித்தனர் அதிகாரிகள். இதுகுறித்து ஓமன் ஏர்வேஸ் மீடியாக்களுக்கு இதுவரை பதில் எதுவும் தரவில்லை.

A Muscat-bound Oman Air flight was stopped in Delhi as co-pilot did not have flying licence with him at the time of checking

Recommended