வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டோணியை கொண்டாடும் ரசிகர்கள்..வீடியோ
  • 6 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணிக்கு டோணி மீண்டும் வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டோணியின் வருகையையும், சென்னையின் சூப்பர் கிங்ஸின் வருகையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த செய்தி வந்த இரண்டு நாட்களாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
சென்னை அணிக்கு மொத்தம் ஐந்து வீரர்கள் திரும்புவார்கள் என்பதால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். ஐபிஎல் ரசிக சண்டை இப்போதே உச்சம் தொட்டு இருக்கிறது.

சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல்லில் இருந்து 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும். மேலும் சென்னை அணிக்காக டோணி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. டோணியுடம் இன்னும் 4 பேர் அணியில் சேர்வார்கள்.

IPL council says Dhoni will be back to CSK team next year. It also added that Chennai Super Kings and Rajasthan Royals will be allowed to retain its 5 players who played for Rising Pune Supergiants and Gujarat Lions. This news has made fans awesome in social media
Recommended