பெண்ணால் ஆரம்பித்த பிரச்சினை.. சென்னை ரவுடி விஜி கொலை ஏன்?- கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
  • 6 years ago
தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி விஜயகுமார் கொலை வழக்கில் கைதானவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர். தண்டையார்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர், விஜயகுமார் என்கிற விஜி (24) ரவுடியான இவர் மீது கொலை உட்பட, 18 வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இதனால் 2013 முதல் விஜி ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். நவம்பர் 29ம் தேதி வழக்கு விசாரணைக்காக, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, விஜி மட்டும் மண்ணடி பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை விரட்டி, விரட்டி சரமாரியாக வெட்டியது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. ரத்த வெள்ளத்தின் நடுவே விஜயகுமார் அந்த இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தபோது, கொலை சம்பவம் அதில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. காமிராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்ட போலீசார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.

5 culprits has been arrested in related with Raowdy Viji murder case, in Chennai
Recommended